10. பூத வாதச் சருக்கம்
|
854. |
வேத வாதம் வெளிறுசெய் தாளங்கோர்
பூத வாதியும் பொங்கினன் மேற்செல வாத வாதி யிவனை யடக்கினா லேத வூதிய
மில்லென வெண்ணித்தான்.
நீலகேசி பூதவாதியை வினவுதல் |
855. |
நில்லப் பாவினி நீகண்ட தத்துவஞ்
சொல்லற் பாலையிங் கென்னலுஞ் சொல்லுவான் மல்லற் றானை மதனசித் தன்னெனுங்
கல்லொத் தோங்கிய தோட்களி யானையான்.
பிசாசகன் கூற்று |
856. |
அணிகொ ளாரத் தரசவை கேட்கெனப்
பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன் சொல்லுவான் குணிகு ணம்மெனுங் கூற்றில னாலதென்
றுணிவைம் பூதங்க ளேதொழில் சொல்லுவேன்.
பொறிபுலன்களின் தோற்றம் |
857. |
திண்ணென் றீநில நீர்வளி காயத்தாற்
கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய் வண்ண நாற்றஞ் சுவையினொ டூறொலி
யெண்ணுங் காலை யியைந்துழி யெய்துமே.
அறிவு இன்பம் முதலியவற்றின்
தோற்றமும் மறைவும் |
858. |
ஐந்துங் கூடிய றிவின்ப மாதியாய்
வந்து தோன்றி மதுமயக் காற்றலி னந்தி நாளுங் குடஞ்சுடர் நாட்டம்போற்
சிந்தி னாலவை சென்றினஞ் சேருமே.
உயிர் என்பது பொய்யெனல் |
859. |
உலகெ லாமவை யேயுயி ருண்டெனச்
சொலவ லாரன சொற்றெளிந் தேநின்று பலக லாங்களுஞ் செய்வ பயனிலார் புலவ
ராவதன் றோவங்குப் போந்ததே.
இதுவுமது |
860. |
சென்ற காலத்துஞ் செல்கின்ற காலத்து
நின்ற காலத்தி லும்மிந் நிகழ்ச்சியே யென்று மிவ்வுல கித்தன்மைத் தேயிது
வன்ற தென்றுரைப் பாரயர்ப் பார்களே.
நீலகேசி பூதவாதி கூற்றை அவையோர் முன்
வழிமொழிந்து கோடல் |
861. |
இட்ட மாவ திதுவெனக் கேட்டவள்
சிட்ட ரன்றியுஞ் சென்றிருந் தார்க்கெலா மொட்டி மீட்டு முரைத்துளந்
தான்கொளீஇக் கட்டு ரைய்யெடுத் தாள்கயற் கண்ணினாள்.
நீலகேசி பூதவாதியை நோக்கி நீ நல்லாசிரியனல்லை எனல் |
862. |
வினையி னீங்கி விளங்கிய ஞானத்தோர்
முனைவ னின்மையி னான்முத னூலில்லை யனைய மாண்பின தாகம மாதலாற்
புனைவ னின்னுரை பொய்யெனச் சொல்லியே.
இதுவுமது |
863. |
கவைத்த கோலொடு கட்டில் கடிஞைகாத்
தவத்திற் கொத்தன தாங்கினித் தாபதம் அவத்த மேபிற வாருயி ரில்லையேற்
சுதத்தி னாலுய்த்தல் சூதது வாகுமே.
இல்லாதனவற்றை இல்லையென்று கூறல்
பயனில் செயல் எனல்
|
864. |
பூத மல்லது பொய்பிற நூலென்று
வாதஞ் செய்து வருந்தி முடிப்பதென் நாத னன்னெறி நல்வினை நற்பயன் யாது
மில்லை யெனினஃ தவத்தமே.
இதுவுமது |
865. |
யாது மில்லை யுயிரிவை யாஞ்சொல்லும்
பூத மேயெனப் போந்திருந் தென்னொடு வாதஞ் செய்கின்ற பூதமவ் வாதமோ
யாதைம் பூதங்க டம்முள்ளு மஃதினி.
இதுவுமது |
866. |
அளித்த வைந்திற் கறிவின்ப மாக்குவான்
களித்தற் காற்ற லுடையன காட்டினாய் களித்தற் காரண காரிய மூர்த்தியா
லொளித்து நின்ற வுணர்வுரு வென்றியோ.
இதுவுமது |
867. |
உருவின் காரிய மேலுரு வென்றுண
ரருவின் காரிய மேலவா காயக்கா மொருவன் காரிய மன்றுணர் வென்கின்றாய்
மருவுங் காரண காரிய மற்றெனோ.
இதுவுமது
|
868. |
வையு மண்ணு மயிரு மலமுமோர்
பையுள் வைக்கப் பளிங்கும் பயக்குமோ பொய்யைம் பூதம் புணர்ந்துணர்
வோடின்பம் செய்யு மென்பது சிந்திக்கற் பாலதோ.
இதுவுமது |
869. |
கள்ளப் பூதமுங் காமிக்கும் பூதமும்
வள்ளற் பூதமும் மல்லவு மல்லவா லுள்ளப் பூதமொன் றாக்குவ துண்மையைக்
கொள்ளப் பூதக் குணமவை யல்லவே.
இதுவுமது |
870. |
பொறியைந் தாலைந்து பூதத்தி னாகிய
வறிவைந் தாலைந்து மவ்வைந்திற் காகுமோ பிறிதொன் றோபொருட் பெற்றிமற்
றின்றெனக் குறிகொண் டாயொன்று கூறெனக் கென்னவே.
இதுவுமது |
871. |
ஒன்றன் காரிய மொன்றென வொட்டினுஞ்
சென்றெ லாமவை சேதனை யாகுமே யன்லெ லாமவை யாக்குமொன் றேயினி
யென்ற லானுமஃ தின்னுயி ரெய்துமே.
இதுவுமது |
872. |
அனைத்துப் பூதமு மேயறி வாக்கினான்
மனத்துக் கின்னுமோர் பூதத்தை மன்னுநீ நினைத்துக் காணன்றி நேடியுங் காணையா
வெனக்கு நீசெய்வ தித்துணை யேயினி.
இதுவுமது |
873. |
பிண்ட மாகிப் பிறந்தன யாவையும்
உண்டுங் கண்டு முணர்ந்தவுஞ் செய்தவுங் கொண்டு மீட்டவை கூறுதல் கூறுங்கால்
கண்ட பூதத்துக் காரிய மென்றியோ.
இதுவுமது |
874. |
பிறந்த நாள்களுட் பிள்ளையு மல்லவு
மறிந்து தாய்முலை யோடல்ல வுண்டிக ளறிந்த வாறென்கொ லோவைந்து பூதமுஞ்
செறிந்த நாள்களுட் செய்வன வல்லவால்.
இதுவுமது |
875. |
புத்தி யானின்றிப் பூதத்தி னாயவேற்
பத்து மல்லவும் பன்றிக்கு நாய்கட்கு மொத்த தன்மைய பன்மைய குட்டிகள்
வித்தி னாய வினைவிகற் பாம்பிற.
இரண்டறி வுயிர்கள் முதலியன |
875. |
புத்தி யானின்றிப் பூதத்தி னாயவேற்
பத்து மல்லவும் பன்றிக்கு நாய்கட்கு மொத்த தன்மைய பன்மைய குட்டிகள்
வித்தி னாய வினைவிகற் பாம்பிற.
இரண்டறி வுயிர்கள் முதலியன |
876. |
குறைந்து பூதங்கள் கூட்டமுண் டாமவ ணுறைந்த பூதத் துணர்வல்ல தின்மையா
லறைந்த பூதங்க ளைந்துமங் கில்லெனின் மறைந்த பூதத்தி லுண்மைவந் தெய்துமால்.
நீலகேசி இரண்டறிவுயி ருடம்பினும்
ஐம்பூத முண்மை காட்டுதல் |
877. |
நீருங் காற்றுமல் லானில மில்லையோ
வூருஞ் சங்கினோ டூர்மச்சி மூக்கில தேரி யுண்டலிற் றீயுமுண் டில்லைகண்
காரி யஞ்செவி காணலங் காயக்கென்.
இதுவுமது |
878. |
ஒன்றொன் றாக வுணர்ச்சி முறைமையாற்
சென்று பூதங்கள் சேர்வதற் கேதுவென் குன்றித் தத்தமுள் யாவையுங் கூடுமே
னின்ற மெய்ம்மை நினதென நேர்வல்யான்.
இதுவுமது |
879. |
ஐந்து பூத மவற்றவற் றாலைந்து
மிந்தி யங்க ளியையு மிவையெனுஞ் சிந்த னையொழி நீயெனச் செப்பினா
ளுய்ந்து வாழு முயிருண்மை யொட்டினாள்.
இதுவுமது |
880. |
உணர்வு மின்பமு மோரறி வாதிக்கட்
புணரு மேயெனிற் பொய்தொகைக் கண்ணென லுணர்வு மின்பமு முள்வழி யேயுயிர்
புணரு மென்றனள் போதன கண்ணினாள்.
இதுவுமது |
881. |
காற்றி னாலுடம் பாமெனிற் காற்றினே
தோற்றி னாலுயிர் தான்றொகை யென்செயு மாற்றிவ் வைந்தினு மாருயி ராமெனு
மாற்ற மாயின் மனங்கொளற் பாலதே.
இதுவுமது |
882. |
வேறு வேறைந்து பூதமு மெய்ம்மையா
லீறுந் தோற்றமு மில்லுயி ராயின பாறி யாவையும் பாழ்த்தொழி யும்மெனக்
கூறி னாயது குற்ற முடைத்தரோ.
உயிர் நித்தியப் பொருளெனல் |
883. |
குழவிக் காலத்துக் கூறின யாவையுங்
கிழவுக் காலத்துக் கண்ணவை கேட்டலா லிழவெக் காலு மிலானினி யார்களைத்
தொழுவிப் பானங்கோர் தோன்றலுந் தோன்றுமே.
துன்பமுதலியவற்றின் வேறுபாட்டிற்குக்
காரணம் யாதெனல் |
884. |
துன்பந் தூய்மையுந் துட்கென வுட்கலும்
அன்பு மானமு மாயமு மாண்மையு மின்பு மென்றிவை யாக்கிய தீதென
முன்பு நின்று முறுக்கவும் வல்லையோ.
இதுவுமது |
885. |
கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள்
வினவு சோதிடங் கேட்டுரை புட்குரல் அனகள் யாவையு மென்னைநின் பூதங்க
ளனகொ னீயிங் கறிந்தனை சொல்லென.
இதுவுமது |
886. |
வைத்த வத்து மறுபிறப் பிற்றமர்க்
குய்த்துக் காட்டுத லேலுல கொட்டுமா லெத்தி றத்தினு மில்லுயி ரென்றிநீ
செத்து வம்மெய்திற் சில்லைமை
செய்பவால்.
இதுவுமது |
887. |
பேயு மில்லை பிறப்பது மில்லென்பாய்
வாயுங் கிள்ளிப் புடைப்ப வருவதென் மாயத் தாலன்றி மந்திரத் தாற்றெய்வங்
கூயக் காலறங் கோடலை யொட்டென.
பூதவாதி நீலகேசி கூறியதனை ஏற்றுக்கோடல் |
888. |
ஒட்டி னேனென் றுரைப்ப வுணர்விலா
முட்டை காண்கென முன்கை முறுக்கியே சுட்டி னாளங்குத் தோற்றமு நோக்கென
விட்டுந் தான்றன் விகுர்வணை காட்டுவாள்.
நீலகேசியின் அருளுடைமை |
889. |
கழுதுங் காணல ராகிக் கலங்கியே
யழுதுஞ் சாப வகலிடத் தாரிவன் முழுதுங் காணின் முடியு மெனமுன்னி
வழுவில் வாயும் வளைபல்லுந் தோற்றலும்.
பேயின் வாய்கண்ட பூதவாதியின் நிலைமை |
890. |
கண் புதைத்துக் கவிழ்ந்தனன் வீழவே
திண் பதத்திற் றெருட்டி யெடுத்திரீஇப் பண்பு தக்கன சொல்லிப் பரியனின்
நண்ப தென்று நடுக்கமுந் தீர்த்தபின்.
நீலகேசி பூதவாதியை வினவலும் அவன் விடையும் பிறவும் |
891. |
பேய்கண் டாயதன் பெற்றி யுரையென
வாய்கண் டேனென்னை வாழ்க்கை வலியன்மின் நோய்கொண் டேனென வஞ்ச னுனக்கவ
டாய்கண் டாயென்றுஞ் சாதலில் லையென.
பூதவாதிக்கு அந்தப் பேய் தாய் என்றதற்குக் காரணங்கூறல் |
892. |
பெற்ற பேரும் பிசாசிக னென்பதே
யற்ற மின்றி யவட்கு மகனைநீ குற்ற மில்லறங் கொள்ளின்மற் றெம்மொடு
சுற்ற மாதலிற் சொல்லெனச் சொல்லுவான்.
பிசாசின் கூற்று |
893. |
பிறப்பும் பேயு முதலாப் பிறகளுந்
திறத்தி னீசொன்ன யாவையுந் தேறிநின் றறத்தை யானு மமைவரக் கொண்டனென்
மறக்க லேனினி மன்னுமை யானென.
|
894. |
பேந்தரு தோற்றப் பிசாசிக னிற்றென
வேந்துமவ் வேத்தவை யாரும் வியப்பெய்தி யாய்ந்த கேள்வியி னாளை யையா யென
மாந்தர் யாரு மதித்தன ரென்பவே.
|