பக்கம் எண் :

பக்கம் எண்:142

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
37. விழாக் கொண்டது
 
            கோபிர் கைதொழக் கோயில் போகி
           வேல்கெழு முற்றமொடு வீதியி னீங்கிக்
           குஞ்சரச் சேரித் தன்னக ரெய்தி
           அன்றை வைகல் சென்ற பின்னர்
 
        (அரசன் மக்கள் படையரங்கேற்றம்)
            1 - 4: கோலவர்..........பின்னர்
 
(பொழிப்புரை) உதயணகுமரன் இங்ஙனம் காவலர் கை தொழ அரண்மனையைவிட்டுச் சென்று அதன் வேற்படை பொருந்திய முற்றத்தையும் வீதியையும் கடந்து குஞ்சரச் சேரிக்கண்ணதாகிய தனது மாளிகையை அடைந்து அற்றை நாள் கழிந்தபின்னர் என்க.
 
(விளக்கம்) கோயில் - அரண்மனை, நகர் - மாளிகை.