உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
32. கரடு பெயர்த்தது |
|
10 |
இனைத்தோ ரிளமையொ டெனைப்பல கேள்வியும்
தவத்தது பெருமையிற் றங்கின விவற்கென
மருட்கை யுற்றதன் மனம்புரிந் தருளி
|
|
|
(பிரச்சோதனன் உட்கோள்)
9 - 11 : இனைத்தோர்........அருளி
|
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட பிரச்சோதன மன்னன்
'அம்மவோ ! இத்தகைய இளம்பருவத்திலேயே இவ்விறை
மகனுக்கு மிகவும் பலவாகிய கல்வியும் கேள்வியும்
இவன் முற்பிறப்பின்கண் முயன்ற பெரிய தவம்
காரணமாக உளவாயின ஆதல் வேண்டும்' என்று
தன்னுள்ளத்தே கருதி ஆற்றவும் வியந்த
தன்னெஞ்சத்தாலே உதயணகுமரனைப் பெரிதும் விரும்பி
அவன்பால் அருள்கூர்ந்து என்க.
|
|
(விளக்கம்) மாந்தர் வேண்டிய
வேண்டியாங்கெய்துதற்குத் தலை சிறந்த காரணம்
தவமேயாதலின் 'இவற்கு எனைப் பல கேள்வியும்
தவத்தது பெருமையிற் றங்கின' என்று வியந்தவாறு.
'வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் ஈண்டு
முயலப் படும்' எனவரும் திருக்குறளையும் (265)
ஈண்டு நினைக. மருட்கை - வியப்பு. இம்மருட்கை
பெருமை நிலைக்களனாகப் பிறந்தபடியாம். என்னை? 'புதுமை
பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமைசாலா மருட்கை
நான்கே' என்பவாகலின் (தொல் - மெய்ப். 7) என்க.
|