உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
40. உவந்தவை காட்டல் |
|
புரிந்த சுற்றமொடு புணர்ந்துடன்
கெழீஇ
விரிநீர்ப் பொய்கையுள் விளையாட்டு
விரும்பிய
மறுநீங்கு சிறப்பின் மதிலுஞ்
சேனை
நறுநீர் விழவி னாளணி கூறுவென்
|
|
(தோற்றுவாய்)
1 - 4: புரிந்த..........கூறுவென்
|
|
(பொழிப்புரை) இவ்வாறு குற்றம்
நீங்கிய சிறப்பினையும் மதில்களையும் உடைய உஞ்சை நகரத்து மக்கள் தாம்
தாம் விரும்பிய சுற்றத்தாரோடு கூடிப் பரந்த நீரையுடைய
பொய்கையின்கண் நீர்விளையாட்டை விரும்பிய அந்த நறிய நீர் விழா
நாளினது அழகினை இனி யான் கூறுவேன் ; கேண்மின்! என்க.
|
|
(விளக்கம்) இது
நுதலிப்புகுதல் என்னும் உத்தி. நூலாசிரியர் கூற்று. உஞ்சேனை - உஞ்சைநகரம்
: ஆகுபெயர்.
|