பக்கம் எண் :

பக்கம் எண்:261

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
           பரந்த விழவினு ளுவந்தவை காட்டி
          நகர மாந்தர் பகர்வன ரறையும்
          பாடிமிழ் பனித்துறைக் கோடணை யரவமும்
 
        1 - 3: பரந்த..........அரவமும்
 
(பொழிப்புரை) இவ்வாறு நகரமாந்தர் பரவிய திருநீர் விழாவின்கண் அம்மாந்தர் தாம்தாம் விரும்பிக்காணும் காட்சிகளை ஒருவர்க்கு ஒருவர் காட்டிக் கூறாநிற்றலாலே ஆரவாரிக்கின்ற குளிர்ந்த அந் நீர்த்துறைகளிலே எழுந்த பெரிய ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) பகர்வனர் - கூறுபவர். கோடணையரவம் - பெரிய முழக்கம். (நீர்விளையாட்டுக் கருவிகளும், போராரவாரமும்)