பக்கம் எண் :

பக்கம் எண்:455

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
50. குறிஞ்சிநிலங் கடந்தது
 
           வல்லவை யெல்லாம் வில்லோன் மக்களை
          விரைந்தன னாகிய விறல்கெழு வீரியன்
          முகைந்த புறவின் முல்லையம் பெருந்திணை
          இகந்த பின்றை யிருபாற் பக்கமும்
 
        1 - 3 : விரைந்தனன்..........பக்கமும்
 
(பொழிப்புரை) இவ்வாறு பிடியானையைச் செலுத்தி விரைந்து சென்றவனாகிய வெற்றிபொருந்திய வீரன் உதயணமன்னன் யாண்டும் மரஞ்செடி கொடிகள் அரும்பிய கொல்லைகளையுடைய அம்முல்லை நிலத்தைக் கடந்த பின்னர் இரு பக்கங்களினும் என்க.
 
(விளக்கம்) விறல் - வெற்றி. இகந்த பின்றை - கடந்த பின்னர். பாற்பக்கம்: இருபெயரொட்டு.