உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
51 நருமதை கடந்தது |
|
எய்தி யிகந்த வியற்றமை
யிரும்பிடி கொய்பூங்
குறிஞ்சிக் கொழுநிலங்
கைவிட் டைந்நான்
கெல்லையொ டாறைந் தகன்றபின்
|
|
1 - 3:
எய்தி..........அகன்றபின்
|
|
(பொழிப்புரை) இவ்வாறு
குறிஞ்சி நிலத்தில் விரைந்து சென்று கடந்த ஒப்பனையமைந்த அப்பெரிய
பிடியானை கொய்தற்கியன்ற மலரையுடைய கொழுவிய அக்குறிஞ்சி நிலத்தைவிட்டு
இருபத்தைந்து காவத வழியைக் கடந்த பின்னர் என்க.
|
|
(விளக்கம்) கொழுநிலம் - செழித்த நிலம். ஐந்நான்கு
எல்லை யோடு ஐந்து ஆறு என மாறுக. ஆறு - வழி. இருபத்தைந்து காவத
வழி என்றவாறு.
|