(விளக்கம்) 85.
மற்றும்-மேலும்; அன்றி அசையாக்கலுமாம். இன்னன - இவைபோல்வனவாகிய
பாராட்டுரைகள்.பயிற்றுதல்-பன்முறையும் கூறுதல்.
86. மகளிரும் மைந்தரும் ; எண்ணும்மை. புகழ்வனர் ; முற்றெச்சம். புகழ்ந்து
என்க 87. வானவாரலே எதிர்கொள்ளப்பட்டுத் தன் நகராகிய
அமராவதியிற் புகும் இந்திரன்போல என்க.
88. தமர்-தம்மவர்; உறவினர். நகர் - நகரம், நாளுக்குநாள் விரிந்து
இடனாவது என்பது பொருள், புக்கனன்-புகுந்தனன்; சேர்ந்தனன். புகு என்னும்
பகுதியடியாகப் பிறந்த வினைப்பெயர்; ஈண்டுத் தன்னொற்றிரட்டி
இறந்தகாலங் காட்டிற்று. தானை - படை வீரர்; அன்றி நால்வகைப்
படைப்பெருக்கமுமாம்,
1. நகர்கண்டது
முற்றிற்று,
|