பக்கம் எண்:617
|
|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 2, கடிக்கம்பலை | | பொலிந்த சும்மையொடு பொன்னணி
மூதூர் மலிந்தகம்
புக்கபின் மண்பொறை
கூரப் பெறலரும்
பெருங்கிளை இறைகொண்
டீண்டி இன்மகிழ்
இருக்கை ஏயர் மகனொடு 5
தண்மகிழ் நெடுங்குழல் தத்தொளித்
தாமத்து
மதிக்கவின் அழித்த மாசறு
திருமுகத்
தணிக்கவின் கொண்ட ஐயரித் தடங்கண்
வனப்புவீற் றிருந்த வாசவ
தத்தை வதுவைச்
செல்வம் விதியிற் கூறுவென்
| | 1-9 ;
பொலிந்த சும்மையொடு..,..,..விதியிற்
கூறுவென் (
1 முதல் 9 வரை புலவர் கூற்று,)
| | (பொழிப்புரை) இங்ஙனமாக
ஆரவாரத்தோடு உதயணன் வாசவதத்தையோடு சயந்தியின்கண்
மகிழ்ச்சிவிக்குப் புகுந்த பின்னர், அவன் பெருங்கேளிர்
நிலஞ்சுமக்கலாற்றாதபடி வந்து குழுமி உரையாநிற்ப, ஏயர் மரபினனாகிய அவ்
வுதயணனுக்கும், குழல் முதலியவற்றையுடைய வாசவதத்தைக்கும் நிகழ்ந்த
திருமணவிழாவின்பத்தை நூன்முறையானே கூறுவேன் கேண்மின்; என்று
கொங்குவேளிர் கூறுகின்றார் என்க,
| | (விளக்கம்) இது நுதலிப்புகுதல் என்னும் உத்தி. 1.சும்மையொடு பொன் அணிபொலிந்த மூதூர் அகம்
மலிந்து புக்கபின் என இயைத்துக்கொள்க. சும்மை-ஆரவாரம், பொன்
முதலியவற்றால் ஒப்பனை செய்யப்பட்ட மூதூர் என்க, மூதூர் -
ஈண்டுச் சயந்தி 2.அகத்தின்கண் மகிழ்ச்சி மலிந்து
என்க. மண் - நிலம். பொறை - சுமை. 3.
பெருங்கிளை - மிகுந்த உறவினர், இறைகொண்டு - தங்கி - ஈண்டு இறை
கொள்ளாநிற்ப என்க, 4.இன்மகிழ் இருக்கை - இனிய
மகிழ்ச்சிக்குக் காரணமான இருக்கை. ஏயர்மகன் - ஏயர் குலத் தோன்றலாகிய
உதயணன். 5. தண்மகிழ் - குளிர்ந்த மகிழமலர் (மாலையினையுடைய, ஒளிதத்துதாமம் என மாறுக. ஒளிதாவும் பொன்மாலையும் மணிமாலையும் என்க. மாசின்மையானே மதியின் கவினை அழித்த திருமுகம் என்க.
6. மதி-திங்கள். 7. திருமுகத்து அழகிற்கு மேலும் ,அழகாந்தன்மையுடைய கண்; "வனப்பின்மேலும் வனப்புடைத்தாகி " என்பர் மேலும், (மகத - 12 ; 63.)
7. ஐ - மென்மை, அரி-செவ்வரி. தடங்கண் - பெரிய கண்.
8. வனப்பு - உறுப்பெல்லாம் திரண்டவழி உண்டாவதோர் அழகு. வீற்றிருத்தலாவது, அழிவின்றி நிலைபெறுதல்.
9. வதுவைச்செல்வம்-திருமணவின்பம். வீதி- நூன்முறை கேண்மின் என்பது சொல்லெச்சம்.
|
|
|