பக்கம் எண் :

பக்கம் எண்:662

உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          கருதியது முடித்த கடிநாட் கோலமொடு
          பருதி ஞாயிற் றுருவொளி திகழக்
          கலிகெழு மூதூர் கைதொழு தேத்த
          வலிகெழு நோன்றாள் வந்தவர் இறைவன
 
        1 - 4; கருதியது முடித்த.......வந்தவர் இறைவன்
 
(பொழிப்புரை)       வத்தவர் இறைவனாகிய உதயணகுமரன் திருமணக் கோலத்தானும் ஞாயிற்று மண்டிலத்தின் அழகிய ஒளி போன்ற தன் முகத்தினது இயற்கை ஒளியானும் திகழாநிற்ப அவ்வழகுத் தோற்றத்தைக் கண்ட ஆரவாரமுடைய அச்சயந்தி மக்கள் கைகுவித்து வணங்கா நிற்ப, என்க
 
(விளக்கம்) வத்தவர் இறைவன் என்னும் எழுவாய் (25-26) கட்டிலேற்றம் கடந்தபின் என்பதனோடு இயையும்
   1. சயந்திமக்களாற் கருதிய கடிநாள், முடிக்கப்பட்ட பின்னர் என்க,
   2. பருதிஞாயி்று இருபெயரொட்டு. வட்ட வடிவிற்றாகிய ஞாயிறு எனினுமாம்.
   3, கலி -ஆரவாரம். மூதூர,் சயந்தி ; ஆகுபெயர்.
   4, வலிகெழு நோன்றாள் என்புழி மிக்க வலிபொருந்திய தாள் என்க.
   5. வத்தவர் இறைவன் ; உதயணன், 
   5 - 25 ; இனி இடைப்பிறவரலாகப் பிரச்சோதனன் மாண்பும் அவன் மனைவியர் மாண்பும் கூறப்படுகின்றன.