பக்கம் எண் :

பக்கம் எண்:685

உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
          மயிர்வினைக் கம்ம மரபுளி முடித்தபின்
          வயிரக் கொடுங்குழை வார்ந்த காதிற்
          பெருமகன் ஆடும் பீடுகெழு சிறப்பின்
          திருமண்ணு நறுநீர் விரைவதின் வருகென
     5.    உருமண் ணுவாவொடு வயந்தகற் குரைப்ப
 
        1 - 5 ;  மயிர்வினைக்..........வயந்தகற் குரைப்ப
 
(பொழிப்புரை) இங்ஙனமாக மயிர்வினைச்சடங்கு முறைப்படி நிகழ்ந்த பின்னர்க் குழைபொருந்திய செவியினையுடைய பெருமகன் மங்கல நீராடுவதற்குரிய பெருமையினையுடைய மங்கல நறுநீர் இனி விரைவாக வருவதாக என்று சான்றோர் உருமண்ணுவாவிற்கும்  வயந்தகனுக்கும் அறிவுறுத்தா நிற்ப என்க.
 
(விளக்கம்) 1. மரபுளி - முறைப்படி.
    2. வயிரமணியாலே இயற்றிய வளைந்த குழை என்க. வார்ந்த-நீண்ட.
    3, பெருமகன்; உதயணகுமரன். பீடு - பெருமை.
    4. திருமண்ணுநீர்-மங்கல முழுக்குக்குரிய நீர். விரைவதின்-விரைவாக. வருக என்று சான்றோர் அறிவுறுத்தா நிற்ப என வினைமுதல் வருவித்தோதுக.

             (6-25. நீர்க்குடம் செல்லும் சிறப்பு.)