பக்கம் எண்:825
|
|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 11. அவலந் தீர்ந்தது | | விலாவணை
ஒழியான் வீணைக் கைவினை
நிலாமணிக் கொடும்பூண் நெடுந்தகை
நினைந்து வைகல் தோறும்
வான்மதி மெலிவிற் பையுள்
கொண்ட படிமை நோக்கி 5 அரும்பெறல்
அமைச்சரொ டொருங்குடன் குழீஇக்
| | 1 - 5 ; விலாவணை...,,,,,,,,,குழீஇ
| | (பொழிப்புரை) இவ்வண்ணமாக
நெடுந்தகை யூகியை நினைத்து புலம்புதல் தவிரானாய், நாள்தோறும் தேய்பிறை
போல மெலிந்து வருத்தம் மேற்கொள்ளா நிற்ப, வனது உருவத்தை நோக்கிய
உருமண்ணுவா ஏனை அமைச்சரோடு ஒருங்குகூடி ஆராய்ந்தபொழுது என்க.
| | (விளக்கம்) 1 - 2.
விலாவணை-அழுகை, வீணை வாசித்தலிற் சிறந்தவனும், முத்துமாலை முதலிய
அணிகலன்களை அணிந்தவனும் நெடிய புகழினையுடையவனும் ஆகிய உதயணகுமரன் என்க.
யூகியை நினைந்தென்க. 3, வைகறோறும்- நாள்தோறும். மதி -
தேய்பிறை, 4. பையுள்-துன்பம். படிமை-உருவம். 5. குழீஇ-கூடி.
ஆராய்ந்தபொழுது என வருவித்துரைக்க.
|
|
|