பக்கம் எண்:840
|
|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 11. அவலந் தீர்ந்தது | | அவ்வழி
மற்றுநீ வளர இவ்வழிப் 150 பட்டதை அறியான் பயநிலங்
காவலன் கட்டழல் எவ்வமொடு கடவுளை
வினவக் கடும்புள் எதிர்ந்து காட்டகத்
திட்டதூஉம் நெடுந்தோள் அரிவை
நின்னைப் பெற்றதூஉம் தகையுடை முனிவன்
தலைப்பட் டதூஉம் 155 வகையுடை நல்யாழ் வரத்திற்
பெற்றதூஉம் விசையுடை வேழம் வணக்கும்
விச்சையும் மாமன் கொண்டுதன் மாணகர்
புக்கதூஉம் ஏயர்க் கிறையென இயற்றிய
வண்ணமும்
| | [தேவியைப் பிரித்த
சதானிகன் செயல்] 148 - 157 :
இவ்வழி,,,,,,.,,,..,இயற்றியவண்ணமும்
| | (பொழிப்புரை) இனி இப்பாற்
கோசம்பி நகரத்தின்கண் சதானிக மன்னன் தன் மனைவிக்கு நேர்ந்தது
யாதென்று அறியாதவனாய்த் தீப்போன்ற கொடிய துன்பத்தோடே ஒரு
துறவியைக்கண்டு தன் மனைவியைப்பற்றி வினவாநிற்ப; அத் துறவி
மிருகாபதியைச் சிம்புளொன்று கண்டு ஊன்குவை எனக்கருதி எடுத்துச் சென்று
காட்டிக்கண் வைத்துச் சென்றதும், அக் காட்டில் கோப்பெருந் தேவியார்
பெருமானே! நின்னைப் பெற்றதும், அங்கே சேடக முனிவன் தேவியாரைக்
கண்டதும், நீ பிரமசுந்தர முனிவன்பால் வரத்தினாலே தெய்வ யாழையும்,
சினமிக்க யானையை அடக்கும் வித்தையையும் பெற்றதும், அவ்வழி
வந்த நின் மாமன் நின்னை அழைத்துக்கொண்டு தனது மாண்புடைய வைசாலி
நகரத்திற்குச் சென்றதும், அந்நகரத் தின்கண் நின்னை அரசனாக்கி
வைத்ததும் என்க
| | (விளக்கம்) 148.
இவ்வழி - இங்கே கோசம்பி நகரத்திலே என்க. 149, பட்டதை -
நிகழ்ந்ததனை. பயநிலங் காவலன் - பயன்மிக்க உலகினைக் காக்கும்
சதானிக மன்னன். 150. கட்டழல் எவ்வம் - நெருப்புப்
போன்ற துன்பம.் கடவுள் - துறவி. 151.
கடும்புள்-சிம்புள். இதனை எண்காற்புள் என்றும் கூறுப. 151. நெடிய
தோளையுடைய மிருகாபதி, 153. தகையுடை முனிவன் -பெருந்தகைமையுடைய சேடக
முனிவன். 155. விசை - வேகம். சினம் : வெறியுமாம். விச்சை
- வித்தை; மந்திரம். 156. மாமன் - நின் மாமனாகிய
விக்கிர வேந்தன். மாண்நகர் - மாண்புடைய வைசாலி நகரம்.
|
|
|