(விளக்கம்) (8)
பள்ளி முன்னர் (உள்ளதும் 28-9) கயமரம் (இல்லாததும் ஆகியதோர்) காவினுள்
இரீஇ காவல் போற்றி எனச்சென்று இயையும்.
1, மலைவயின் -
அம்மலைச்சாரலிடத்தே. 2. வெந்திறல் - வெவ்விய ஆற்றல்.
வேந்தன் ; உதயணகுமரன். வீழ்பவை -
விரும்புவனவற்றை. 3.,
ஐம்பெருங்குழு - 'அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத் தொழிற்
றூதுவர், சாரணர் என்றிவர், பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப்
படுமே,' 3. எண் பேராயம் -
'கரணத் தியலவர் கருமகாரர் கனகச்சுற்றங் கடைகாப்பாளர் நகரமாந்தர்
நளிபடைத் தலைவர், யானை வீரர் இவுளி மறவர் இனையர் எண்பேராயம் என்ப'
இவை சிலப்பதிகாரத்தில் (5; 157 -60) அடியார்க்கு நல்லார் உரை
மேற்கோள்கள். இனி அந்நூலின்
அருபதவுரையாசிரியர்,
'சாந்துபூக் கச்சாடை பாக்கிலை
கஞ்சுகநெய் ஆய்ந்த இவரெண்மர்
ஆயத்தார்-வேந்தர்க்கு மாசனம்
பார்ப்பார் மருத்தர்வா னிமித்தரோ
டாசில் அவைக்களத்தார் ஐந்து' எனக்
காட்டுவர், 4. கவவி - சூழ்ந்து. விடாஅ -
விடாத. 5, அருமைக்கு ஒத்த - அருமையுடையதாக மதித்துப்
பேணத் தகுந்த. அஞ்சு - அச்சம், காப்பின்
-காவலையுடைய.
6. உரிமைச் சுற்றம் - உவளக மகளிர்
(அந்தப்புரத்து மகளிர்). உய்த்து - செலுத்தி 7. தீது -
காதிகர்மம். இவை உயிர்ப்பண்புகளைக் கொல்லுதல் பற்றித் தீது
எனப்பட்டன. அவையாவன ; ஞானவரணியம் தரிசனாவரணீயம் மோகனீயம்
வேதனீயம்
என்பன.இவற்றை, '
பாலனைய சிந்தை சுடரப் படர்செய் காதி
நாலுமுட னேயறிந்து'
எனவரும் சீவக சிந்தாமணியானும் (3062) உணர்க, தெரிபொருள்
கேள்வி மூது அறிமுனிவன் - ஆராய்ந்தறியும் பொருட் கேள்வியானே
உணரப்படும் பழம்பொருளை அறிந்த முனிவன் என்க, மெய்யுணர்ந்தோன் என்பது
கருத்து. 8, பள்ளி - தவக்குடில். 9
- 29 இனி இடைப்பிறவரலாக அத்தவப் பள்ளியின் முன்னுள்ள அப் பொழிலின்
மாண்பு கூறுகின்றார்.
|