பக்கம் எண் :

பக்கம் எண்:888

உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
          புனைமலர்ப் பிணையல் புரவலன் சூட்டி
          இனமடற் பெண்ணை ஈர்ந்தோடு திருத்திச்      
          செல்க நங்கை மெல்ல நடந்தென
          அடுத்த காதலொ டண்ணல் விடுப்ப
 
        [உதயணன் விரிசிகையைப் போகவிடுதல்]
             1 - 4 ; புனைமலர்................விடுப்ப
 
(பொழிப்புரை) இவ்வண்ணம் புரவலன் விரிசிகைக்குப் புனைமலர்ப் பினையலைச் சூட்டி. அவள் தன் காதோலையினையுஞ் சீர் திருத்தியிட்டு'நங்காய்! இனி மெல்ல மெல்ல நடந்து செல்வாயாக' என்று கூறிக் காதலோடே விடை கொடுத்துய்ப்ப என்க.
 
(விளக்கம்) 1. புரவலனாகிய(ச) அண்ணல் காதலொடு சூட்டித்திருத்தி நங்கை (இனி) நீ மெல்ல நடந்து செல்க என்று கூறிவிடுப்ப எனக் கூட்டுக, புனைமலர் ; வினைத்தொகை, பிணையல் - மாலை. புரவலன் -  அரசனாகிய   உதயணன்,
   2, புல்லினமாகிய பெண்ணை, மடற் பெண்ணை என்று தனித்தனி கூட்டுக இளமலர்ப் பெண்ணை என்றும் பாடம். பெண்ணை -  பனை. ஈர்ந்தோடு   - ஈரமான ஓலை ; இஃது காதணி.
   3,  நங்கை - மகளிருட் சிறந்தவள்