(விளக்கம்) கொலைச் சிறை - கொலை செய்தமையால்
சிறையிடப்பட்ட குற்றமாந்தர். தளை - விலங்கு. தானைக்கும் கோவிற்கும்
பிழைத்தொழுகிய குற்றமாந்தர் என்க. கொடிநகர் புகுதுக என்றமையால் இவர் நாடு
கடத்தப்பட்டோர் என்பது பெற்றாம். கடன் - கடமைப்பொருள். நசை - பொருள்களின்
மேற்செல்லும் விருப்பம். இஃதில்லார்க்கு நல்குரவும் இல்லை. ஆதலின் நல்குரவடைந்த
நசைசால் ஆடவர் என்றார். செல்லல் - துன்பம். உள்ளியது - நினைந்த பொருள்.
மன்னர்க்கு மகப்பேறுண்டாய பொழுது இங்ஙனம் சிறைவீடு செய்தலும் திறைவீடு செய்தலும் மரபு
இதனை,
'கறைபன் னீராண்
டுடன்விடுமின் காமர்சாலை
தளிநிறுமின் சிறைசெய் சிங்கம்
போன்மடங்கிச் சேரா மன்னர்
சினமழுங்க உறையுங் கோட்ட
முடன்சீமி னொண்பொற் குன்றந்
தலைதிறந்திட் டிறைவன் சிறுவன்
பிறந்தானென் றேற்பார்க் கூர்தோ றுய்த்தீமின்' (சீவக.
நாமக. 3061)
எனவரும் சிந்தாமணியானும்
உணர்க.
|