(விளக்கம்) இப் பகுதியில் 124 - ஆம் அடியின்
முதல் இரண்டு சீர்கள் அழிந்தன. பண்டே தவமுடையேன் அதனால் பெற்றனம் என மாறி
ஒருசொற்பெய்து கொள்க. மதலை - ஊற்றுக்கோல். 'மதலை மாண்குடி தொலைவழி யூன்றும்
புதல்வர்ப் பெற்றான்' என்னுமிதனோடு,
'சிதலை
தினப்பட்ட வால மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி
யாங்குக் குதலைமை தந்தைகட் டோன்றிற்றான்
பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்' (நாலடி -
197)
எனவரும் வெண்பாவினையும் நோக்குக.
குறிகோள் - நிமித்தம். |