பக்கம் எண் :

பக்கம் எண்:1037

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
         
    45    வாழ்கநங் கோமான் வையக மெல்லாம்
          பகையும் பிணியும் பசியு நீங்கித்
          தகையுஞ் செல்வமுந் தாம்படு கென்ன
          மிகைபல புகழ்ந்து தொகைஇ யாற்றிய
          இன்ப மொழியவன் பன்முறை யறைந்தபிற்
 
                   (இதுவுமது)
            45 - 49 : நங்கோமான்...............பின்
 
(பொழிப்புரை) நம்பெருமானால் பாதுகாக்கப்படும் நாடெங்கும் பகையும் பிணியும் பசியும் நீங்கிப் பெருந்தகைமையும் செல்வமும் பெருகுக ! என்று மிகையாகப் பலப்பல புகழ்ந்து தொகுத்துச் சொன்ன கேட்டோர்க்கு இன்பந் தரும் மொழிகளை அவ்வள்ளுவ முதியோன் பன்முறையுங் கூறி அறிவித்தபின் என்க.
 
(விளக்கம்) தகை - அழகுமாம். தாம் : அசை. தொகைஇ - தொகுத்து. அவன் : வள்ளுவமுதியன்.