பக்கம் எண் :

பக்கம் எண்:1041

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          ஆராக் காதலொ டணிபா ராட்டி
          நீராட் டயர்ந்து பல்கல னணிந்து
          சீரார் செல்வமொடு செவ்வி கொடீஇத்
    75    தெரிமா ணாளர் திறவதிற் சூழ
          அரிமா சுமந்த வாசனத் திருந்து
 
                  (இதுவுமது)
         72 - 76 : ஆராக்காதல்............இருந்து
 
(பொழிப்புரை) இன்புற்று இன்புற்று அமைதி பெறாமைக்குக் காரணமான புத்தணிகலம் பலவும் அணிந்து நீராடி அழகுக்காட்சிகளைப் பாராட்டிச் சிறப்புற்ற செல்வத்தோடு எல்லோரும் தன்னை எளிதிற் காணும்படி செவ்வி கொடுத்துத் தன் அமைச்சர் நன்றாகத் தன்னைச் சூழ்ந்திருப்பத் தான் அரிமா சுமந்த இருக்கையின்கண் வீற்றிருந்து என்க.
 
(விளக்கம்) ஆராக் காதல் - நுகர்ந்து நுகர்ந்து அமையாத பேரன்பு. அணிபாராட்டல் - அழகினை விரும்பிச் செய்தல். செவ்வி - சமயம். கொடீஇ - கொடுத்து. தெரிமாணாளர் - அமைச்சர். பொருள்களை ஆராய்ந்து காணும் மாண்புடையோர் என்றவாறு.