பக்கம் எண் :

பக்கம் எண்:1042

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          பொன்றாப் புகழோன் போக்கல் வேண்டி
          ஒன்றா ரட்ட யூகியைத் தரீஇ
          இன்றியா னெய்தினெ னெனின் ...........
    80    பிரச்சோ தனனவ னுரைத்ததன் பின்னர்ப்
 
         (யூகியைப் பிரச்சோதனன் வருவித்தல்)
            77 - 80 : பொன்றா............பின்னர்
 
(பொழிப்புரை) அழியாத புகழையுடைய அப்பிரச்சோதன மன்னன் பகைவர்களைக் கொன்ற யூகியைக் கோசம்பி நகரத்திற்குப் போக்குதலை விரும்பித் தன் முன்னிலையில் வரவழைத்து இன்று யான் இத்தகைய இன்பத்தை எய்தினேன் எனின்.........அவ்விடத்தே அம் மன்னவன் கூறிய பின்னர் என்க.
 
(விளக்கம்) பொன்றா - அழியாத. புகழோன் : பிரச்சோதனன். கோசம்பிக்குப் போக்கல் வேண்டி என்க. ஒன்றார் - பகைவர். தரீஇ - அழைத்து. 79 ஆம் அடியின் இறுதிச் சீரழிந்தது. அவண் - அவ்விடத்தே. யான் எய்தும் இவ்வின்பத்திற்குக் காரணம் நீயேதான் என்று அம்மன்னவன் உரைத்தான் என ஊகிக்கலாம்.