உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
முதல்வன்
செவ்வி முகமுத னோக்கிச்
சிதைபொரு ளின்றிச் செந்நெறி
தழீஇ உதையத் திவரு
மொண்சுடர் போல 90 எல்லா மாந்தர்க்கு
மிருளற விளங்கும்
செல்லா றிதுவெனச் சொல்லுதல் வேண்டிச்
|
|
(இதுவுமது)
87 - 91
: முதல்வன்............வேண்டி
|
|
(பொழிப்புரை) மன்னனுடைய
செவ்வியுடைய முகத்தை நோக்கிப் பொய்ப் பொருளில்லாமல் செவ்விய நூல் நெறியைத்
தழுவி வைகறையில் தோன்றும் ஒள்ளிய சுடரையுடைய ஞாயிற்று மண்டிலம்போலே எல்லா
மாந்தர்களுக்கும் இருளின்றி விளங்குகின்ற செந்நெறி இஃது என்று சொல்லுதலை விரும்பி
என்க.
|
|
(விளக்கம்) முதல்வன் : மன்னன். செவ்வி முகம் -
தான் கூறுவதனைக் கேட்டற்கு அமைந்திருக்கின்ற முகம். முதல் : ஏழனுருபு : இரண்டாவதன்கண்
மயங்கிற்று. சிதைபொருள் - பொய்ப்பொருள். செந்நெறி - செவ்விய நூல் நெறி. உதையம்
- உதயம், ஒண்சுடர் - ஞாயிறு. ஞாயிறு பொருள்களை விளங்குதல் போன்று விளக்கி ஆறு
காட்ட என்க.
|