(விளக்கம்) வேந்து : பிரச்சோதனன். முதுநகர் -
பழைய உஞ்சை நகரம். உஞ்சை நகரத்திற்கு மலைக் கூட்டம் உவமை. அவ்வுஞ்சை நகரத்தில்
பெரும் பொருளைப் பரிசிலாகப் பெற்றுக்கொண்டு கோசம்பி நகரத்திற்குச் செல்லும்
யூகிக்கு அம் மலையில் தோன்றி அம் மலையிடத்துள்ள பொருள்களை வாரிக்கொண்டு கடலிற்
புகச் செல்லும் யாறு உவமை. கோசம்பி நகரத்திற்குக் கடல் உவமை. நகரம் - கோசம்பி
நகரம். இனிது புக்கனன் என மாறுக.
7.
யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
முற்றிற்று.
|