(விளக்கம்) நல்லாசாரம் - அறநூல். நல்லோர் -
நல்லாசிரியர். காட்ட - கற்பிக்க. நல்ல பொருள் நூலும் ஞான நூலும் என்க. நவின்று -
பயின்று. கரணம் - தொழில் விகற்பம். கொடைக்கடம் - கொடையாகிய
கடமை.
'இயற்றலு மீட்டலுங் காத்தலுங்
காத்த வகுத்தலும் வல்ல
தரசு' (குறள். 385)
என்பது பற்றி ஆசார நூல் பொருள் நூல்
முதலியவற்றைப் பயின்று கொடைக் கடனும் பூண்டனன்
என்றவாறு. |