உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
குறைவில் செல்வமொடு குமார காலம்
45 நிறையுற வுய்த்து நீர்மையின்
வழாஅ ஏமஞ் சான்ற
விந்நில வரைப்பிற்
காம னிவனெனக் கண்டோர்
காமுறத் தாளுந்
தோளுந் தருக்கி நாளும்
நடவா நின்ற காலை மடனார்ந்
|
|
(நரவாணதத்தனது
காளைப்
பருவம்)
44 - 49 : குறைவில்...............காலை
|
|
(பொழிப்புரை) குறைவற்ற
செல்வத்தோடே வளர்ந்து அப்பள்ளிப் பருவங்கடந்து காளைப்பருவம் எய்திப் பண்பில்
வழுவாத பாதுகாவ லடைந்த இந்த நில உலகத்தின்கண் இவனே ''காமன்'' என்று தன்னைக்
கண்டோர் காமுறும்படி தாளுந்தோளும் தருக்குற்று நாள்தோறும் நடவாநின்ற காலத்தே
என்க.
|
|
(விளக்கம்) குமாரகாலம் - காளைப்பருவம்;
மகளிருடைய மனத்தைக் கவரும் கட்டழகு மிக்க பருவம். தாளுந்தோளும் முறுக்கேறித் தருக்கி
நடவாநின்ற காலம் என்க. தருக்குதல் - யாரே எம்மை நிகர்வார் என்று
இறுமாப்புறுதல்.
|