உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
90 கொய்ம்மலர்ப் படலைக்
கோமுகற் கூஉய்க்
கைபுனை வனப்பிற் கணிகையர்
சேரியிற் செய்பந்
தீதுடைச் சேயிழை மாதரை
ஐய மின்றி யறிதி
யாயின் மெய்பெற
வுரையென மேயினன் வினவக் |
|
(நரவாணதத்தன் கோமுகனை வினாதல்)
90 - 94 :
கொய்.........வினவ |
|
(பொழிப்புரை) கொய்த
மலரோடு தளிர் விரவிப் புனைந்த படலைமாலையணிந்த கோமுகனையழைத்து, ''நண்பனே ! யாம்
உலாவரும் வழியின்கண் உள்ள கணிகையர் சேரியின்கண் ஒப்பனை செய்யப்பட்ட அழகினையுடைய
இப் பந்தினை உடைய நங்கையை நீ ஐயமின்றி அறிவாயாயின் யான் அவளை உணர்ந்து
கொள்ளும்படி எனக்குக் கூறுவாயாக'' என்று பெரிதும் விரும்பியவனாய் வினவா நிற்றலாலே
என்க. |
|
(விளக்கம்) கொய்மலர் : வினைத்தொகை. படலை -
மலரும் தளிரும் விரவிப்புனைந்த ஒருவகை மாலை. கோமுகன் - தோழருள் ஒருவன். கூஉய் -
அழைத்து. செய்பந்து : வினைத்தொகை. சேயிழை மாதரை என்றது நங்கையை என்னும் அளவின்
நின்றது. மேயினன் -
விரும்பியவனாய். |