(விளக்கம்) உறாஅர் போல - நொதுமலர்போலக்
காட்டி மறுப்பாள் போல மறாத மாதர் என்க. மாதர் : மதனமஞ்சிகை. வலித்தபின் -
துணிந்தபின். மகன் : நரவாணதத்தன். வதுவை - மணச்சடங்கு. விதி - மறை நூல்விதி. பதன்
- செவ்வி. பண்பு - காதற் பண்பு.
'செறாஅச்
சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும் உறாஅர்போன் றுற்றார்
குறிப்பு' (குறள். 1097)
என்பது
திருக்குறள்.
8. மதனமஞ்சிகை வதுவை
முற்றிற்று.
|