(விளக்கம்) இகல் - மாறுபாடு. வீரியன் என்றது
இகழ்ச்சி. இகழ்தல் செல்லா என்றது காலந்தாழ்க்காமல் என்றவாறு. பெற்றுச்
செல்கின்றேன் என ஒருசொல் வருவித்துக் கொள்க. மதனமஞ்சிகை மின்னல் போல் நுடங்கிட
என்க. ஒளிக்கிடமான விசும்பு என்க. 106 ஆம் அடியில் ''போ'' என்னும் ஓரெழுத்து நிற்கப்
பிறவும் இக்காதையின் எஞ்சிய பகுதிகளும் இப்பெரு நூலின்கண் இதற்குமேல் உள்ள பகுதிகளும்
காலக் கூற்றன் வாய்ப்பட்டன.
9. மதனமஞ்சிகை பிரிவு
என்னும் இக்காதையில் 105 ஆம் அடிகாறும் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
எழுதிய உரையும் விளக்கமும்
முற்றின.
|