பக்கம் எண் :

பக்கம் எண்:115

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
           பசுங்கதிர்த் திங்கள் விசும்பளந் தோடிக்
           கடுங்கதிர்க் கனிலி கக்குபு போகித்
           தானொளி மழுங்கி மேன்மலை குளிப்ப
 
                 (திங்கள் மறைதல்)
              97 - 99 : பசுங்..........குளிப்ப
 
(பொழிப்புரை) பசிய ஒளியையுடைய திங்கள் மண்டிலம் வானத்தை
  அளந்தியங்கிப் பிரிந்துறைவார் திறத்திலே சுடு நெருப்பை வீசிச்சென்று
  தனது ஒளிமழுங்கி மேலைத்திசை மலையிலே மறையாநிற்ப வென்க.
 
(விளக்கம்) குளிர்ந்த ஒளியாகலின் பசுங்கதிர் என்றார். கடுங்கதிர்
  என்றது பிரிந்துறைவாரைச் சுடுதனோக்கி. கனலி-தீ மேன்மலை-
  அத்தகிரி.