உரை |
|
3. மகத காண்டம் |
|
8. பாங்கர்க் குரைத்தது |
|
வைகிய
காலை வத்தவ
ரிறைவனும்
பைவிரி யல்குற் பதுமா
பதியும்
கண்ணுறக் கலந்த காம
வேகம்
ஒண்ணிறச் செந்தீ யுண்ணிறைத் தடக்கிய
5 ஊதுலை போல வுள்ளகங் கனற்ற |
|
1 - 5 :
வைகிய............கனற்ற் |
|
(பொழிப்புரை) பொழுது புலர்ந்த
பின்னர் வத்தவமன்னனாகிய உதயணகுமரனும் பாம்பின் படம்போன்று விரிந்த
அல்குலையுடைய பதுமாபதியும் தம்முள் ஒருவரை ஒருவர் கண்ணுற்றமையாலே
இருவருள்ளத்தும் விரவிய காமவேகம் ஒளியும் நிறமுமுடைய சிவந்த
நெருப்பை உள்ளே நிரப்பி ஊதப்பட்ட உலைபோன்று அகஞ்சுடாநிற்ப
என்க. |
|
(விளக்கம்) கண்ணுதலாலே
கலந்த காமவேகம் என்க. உண்ணிறைத் தடக்கிய உலை, ஊதுலை எனத்
தனித்தனி கூட்டுக, |