பக்கம் எண் :

பக்கம் எண்:118

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
              
           மறுத்தவற் காணுங் குறிப்புமனத் தடக்கி
           பண்கெழு விரலிற் கண்கழூஉச் செய்து
           தெய்வம் பேணிப் பையென  விருந்தபிற
 
             (பதுமாபதியின் நிலை)
            6 - 8; மறுத்து.........இருந்தபின்
 
(பொழிப்புரை) பதுமாபதி மீண்டும் அப்பார்ப்பன மகனைக் காணல்
  வேண்டும் என்னும் அவாவினைப் பிறர் அறியாமற் றன் மனத்தினுள்ளேயே
  அடக்கிக்கொண்டு யாழ்பயின்று சிறந்த தன் விரல்களாலே முகங் கழுவி
  இறைவணக்கஞ் செய்து மெல்லென இருந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) பதுமாபதி என்னும் எழுவாய் வருவித்தோதுக.
  காணும் குறிப்பு-காண்டற்கவாவும் கருத்து. பண்கெழுவிரல்-பண்ணிசைத்துப்
  பயின்ற விரல்கள், கழூஉச்செய்து; ஒரு சொல்; கழுவி என்க. ''நாளந்தி
  கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத் தானறியுமாற்றாற் றொழு தெழுக''
  என்பது ஆசாரக்கோவை