பக்கம் எண் :

பக்கம் எண்:12

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
            விறற்போ ருதயணன் விரும்புபு விதும்பி
           என்னே யன்னவு முளவோ வென்றலின்
     85    வேட்டதன் வழியே பாற்பட நாடி
           ஆதி வேதத் தகவயிற் பெரியோர்
           ஓதிய வுண்டென வுணரக் கூற
 
         (உதயணன் கூற்றுந் தோழர் செயலும்)
               83 - 87 ; விறல்............கூற
 
(பொழிப்புரை) இம்மொழிகளைக்கேட்டிருந்த வெல்லும்
  போரையுடைய உதயண மன்னன் பெரிதும் விரும்பி விரைந்து
  'என்னே ! என்னே !  இத்தகைய வித்தைகளும் உலகில்
  உள்ளனவோ?''என்று கூறி வியந்து வினாதலும், அவன் விரும்பிய
  அச்சூழ்ச்சி வழியாகவே பகுதிபட நன்கு ஆராய்ந்து ''பெருமானே!
  உண்டு! உண்டு! இத்தகைய அரும்பெறல்  விச்சைகள் பல நந்தம்
  முதனூலின் அகத்தே நம் சான்றோர்கள்  ஓதியுணர்ந்தன உள ;
  என்று நன்குணரும்படி கூற என்க.  
 
(விளக்கம்) விறல் - வெற்றி. விரும்புபு - விரும்பி. விதும்பி
  - விரைந்து. என்னே! என்றது வியப்பு மொழி. பால்-பகுதி. ஆதிவேதம்
  -அருகனாற் கூறப்பட்ட முதனூல.்,