பக்கம் எண் :

பக்கம் எண்:120

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
     20    செவ்வி யறிந்து பையெனக் குறுகி
           வேறுபடு வனப்பின் விளங்கிழை வையம்
           ஏறின மாகி யிளமரக் காவினுட்
           சேறு மோவெனச் சேயிழைக் குரைப்ப
 
           (இதுவுமது)
      20-23 ; செவ்வி..................உரைப்ப
 
(பொழிப்புரை) செவ்வியறிந்து மெல்லப் பதுமாபதியை
  அணுகி மாறுபட்ட அழகினையுடைய விளங்காநின்ற அணிகலன்களையுடைய
  கோமகளே ! யாம் இன்றும் வண்டியிலேறி இளமரப் பொழிலினுள்ளே
  ஆடற்குப் போவோமா? நின் கருத்தென்னை? என்று பதுமாபதியை வினவ
  என்க.
 
(விளக்கம்) வேறுபடுவனப்பின் விளங்கிழை என்றது வேறு
  வேறு வகையான அழகுடைய விளங்கிய இழையினையுடையோய்
  என்றும், மெய்வேறுபட்டிரு க்கின்றவளே என்றும் இரு பொருளும்
  தோற்றுவித்தலுணர்க. சேறுமோ-செல்வோமா?