பக்கம் எண் :

பக்கம் எண்:124

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
           றைந்நாள் கழிந்த பின்றைத் தன்மேல்
           இன்னா வெந்நோய் தன்னமர் தோழிக்
           குரைக்கு மூக்கமொடு திருத்தகு மாதர்
           வான்றோய் மண்டபம் வந்தொருங் கேறித்
 
           இதுவுமது
    46 - 49 ; தன்மேல்.......ஏறி
 
(பொழிப்புரை) மறுநாள் பதுமாபதி தனக்குண்டாயிருக்கின்ற
  துயர் செய்யும் காமநோயைத் தன்னைப் பெரிதும் விரும்பும்
  உசாஅத்துணைத் தோழிக்குணர்த்தி அறத்தொடு நிற்கும்
  ஊக்கத்தோடு திருமகளை ஒத்த அக்கோமகள் வானைத்
  தீண்டுகின்ற அக்காமன் கோயில் மாடத்தே தோழியர்களோடு
  ஏறி என்க
 
(விளக்கம்) தன்மேல் இன்னாவெந்நோய் என்றது, தான்
  எய்தியிருக்கிற காமநோயை. தோழிக்குரைத்தல் - அறத்தொடு
  நிற்றலாம் மண்டபம் - காமன்கோயில் மண்டபம்.