பக்கம் எண் :

பக்கம் எண்:127

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
           அந்தண வுருவொடு வந்தவ ணின்றோன்
           யார்கொ லவனை யறிதி யோவெனப்
           பாவை வினவப் பணிந்தவ ளுரைக்கும்
 
        (பதுமாபதி அயிராபதியை வினாதல்)
          67 - 69 : அந்தண..............உரைக்கும்
 
(பொழிப்புரை) பதுமாபதி அயிராபதியை நோக்கிப் பார்ப்பன
  உருவத்தோடு அவ்விடத்தே வந்து நின்றவன் யார்? அவன்
  இன்னான் என நீ அறிவாயோ? என்று வினவ அயிராபதி
  அவளை வணங்கிக் கூறுவாள்; என்க.
 
(விளக்கம்) பாவை - பதுமாபதி. அவள் - அயிராபதியை.