பக்கம் எண் :

பக்கம் எண்:129

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
     
           பல்வகை மரபிற் பந்துபுனைந் துருட்டுதல்
           வல்லவன் மற்றவன் கைவயிற் கொண்டது
     80    புறத்தோ ரறியாக் குறிப்பி னுணர்த்தி
           நமக்கு வேண்டென நலத்தகை கூறக்
 
         (பதுமாபதி அயிராபதியிடம் கூறல்)
           78 - 81 ; பல்வகை....................கூற
 
(பொழிப்புரை) அதுகேட்ட பதுமாபதி 'தோழி! இப்பார்ப்பன
  மகன் பல வேறு வகையினும் பந்துகள் செய்து பல்வேறு வகையாக
  உருட்டிப் பந்தாடுதலில்  மிகவும். வல்லவன் போலும்! அவன்
  இப்பொழுது தன் கையின்கட்கொண்டு உருட்டாநின்ற அவ்வழகிய
  பந்தின்கண் என் அவாச் செல்கின்றது; -ஆதலால். பிறர் யாரும் ,
  அறியாதபடி என் விருப்பத்தினை அவனுக்குக் குறிப்பாகக் கூறி
  அப்பந்தினை நமக்குத் தருமாறு அவனை வேண்டுவாயாக என்று
  பெண்மை நலமிக்க அப்பெருந்தகைப் பெண்ணாகிய பதுமாபதி
  அயிரா  பதிக்குக் கூறாநிற்றலாலே என்க
 
(விளக்கம்) உதயணன் பல்வேறு வகையாகப் பந்தினை
  உருட்டி ஆடுதலைக் கண்டமையால் அவன் ஆட்டத்தைப் பதுமாபதி
  பாராட்டுகிறாள், வாயாற் கூறாமல் கண்ணினும் கையினும்
  குறிப்பாலுணர்த்தி என்க. நலத்தகை-பதுமாபதி.