பக்கம் எண்:130
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 8. பாங்கர்க் குரைத்த | |
கண்ணினுங் கையினுங் கண்ணிய
துணர்த்திப்
பெருந்தகை யண்ண றிருந்துமுக
நோக்கி
நின்கைக் கொண்ட பூம்பந் தென்கை
85 ஆய்வளைத் தோளிக் கீக்க வென்ன | | (அயிராபதி
உதயணன்பால் பந்து
வேண்டல்) 82 - 85
: கண்ணினும்..,,.,,,,,,,,,,என்ன | | (பொழிப்புரை) .அயிராபதி தானும்
பெருந்தகைமையுடைய தலைவனாகிய உதயணனுடைய திருத்தமுடைய முகத்தை நோக்கித்
தன் கண்களாலும் கையாலும் பதுமாபதி கருத்தினைக்
குறிப்பாலுணர்த்தி 'ஐயனே! நின் கையிற் கொண்டுள்ள பூம்பந்தினை அழகிய
வளையலணிந்த கைகளையுடைய எங்கோமகளுக் குக் கொடுத்தற்கு என் கையிற்றருக'
என்று குறிப்பிக்க என்க. | | (விளக்கம்) பதுமாபதி
கண்ணியதனைக் கண்ணினுங் கையினும் உணர்த்தி என்க. தோளிக்கு ஈயும்
பொருட்டு என் கையீக்க என்று குறிப்பால் வேண்ட என்க.
ஆய்வளைத்தோளி ; பதுமாபதி. |
|
|