பக்கம் எண் :

பக்கம் எண்:136

உரை
 
3. மகத காண்டம்
 
8. பாங்கர்க் குரைத்த
 
         
           ஒருப்பா டெய்தி யுற்றவ ரெல்லாம்
           குறிப்பின் வாரா நோக்கெனக் குருசிற்கு
     120    மறுத்த வாயிலொடு வலிப்பன ராக
 
        (மற்றைத் தோழரும் மறுத்துக் கூறல்)
       118 - 120 : ஒருப்பாடு......வலிப்பனராக
 
(பொழிப்புரை) இவ்வாறு ஏனைய உருமண்ணுவா முதலிய
  தோழர்கள் அனைவரும் தம்முள் ஒருமை உடையராய்
  அப் பதுமாபதியின் நோக்கம் காமக் குறிப்பினோடு
  வாராத நோக்கமே என்று உதயணனை மறுக்கும்
  துணிவுடையர் ஆக; என்க.
 
(விளக்கம்) ஒருப்பாடு - ஒருமை. உற்றவர் - உருமண்ணுவா
  முதலியோர். வாராத என்னும் பெயரெச்சத்து ஈறு கெட்டது.
  குருசில் ; உதயணன். வலிப்பினர் - துணிவுடையோர்.