உரை |
|
3. மகத காண்டம் |
|
8. பாங்கர்க் குரைத்த |
|
உயிரொன் றாகி யுள்ளங்
கலந்தவள்
செயிரின் றாகிய செங்கடை
நோக்கம்
அணங்கெனக் காயிற் றவட்குமென்
னோக்கம்
அத்தொழி னீர்த்தென வெய்த்தன னென்ன
125 உரைப்பத் தேறா வுயிர்த்துணைத்
தோழரைத்
திருச்சேர் மார்பன் றேற்றுதல் வேண்டி |
|
(உதயணன் கூற்று) 121 - 126 :
உயிர்................வேண்டி.. |
|
(பொழிப்புரை) திருமகள் வதியும்
மார்பினையுடைய உதயண குமரன் தான் தன்னுடைய உயிரோடு ஒன்றுபட்டுத் தன்
உள்ளத்தே கலந்துள்ள பதுமாபதியின் குற்றம் இல்லையான சிவந்த
கடைக்கண்ணின் நோக்கம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.
அப்பதுமாபதிக்கும் என்னுடைய நோக்கம் வருத்தம் தருவ தாயிற்று; என்று நான்
நன்கு அறிந்துள்ளேன் என்று கூறா நிற்பவும், அம்மொழியினைத் தெளிந்து
கொள்ளமாட்டாத தன் உயிர்க்குயிராகிய அந் நண்பர்களைத் தெளிவிக்க
விரும்பி; என்க, |
|
(விளக்கம்) "உயிர்
கலந்தொன்றிய தொன்றுபடு நட்பு''- (அகநா,-205 ; 1.) செயிர் - குற்றம்.
நீர்த்து - தன்மையுடையது. எய்த்தனன் - அறிந்தேன். திரு - திருமகள்.
மார்பன் ; உதயணன். வேண்டி-விரும்பி. |