பக்கம் எண் :

பக்கம் எண்:143

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
           ஆடுகொம் பன்ன வம்மென் மருங்குற்
           பாடகச் சீறடிப் பல்வளை மகளிரைப்
           பக்க நீக்கிப் பைந்தொடிக் கோமாள்
           நற்பூம் பொய்கை புக்குவிளை யாடும்
     35    உள்ள மூர்தர வொழிநிலத் தோங்கிக்
 
               ( பதுமாபதியின் செயல்)
                31 - 35; ஆடு.........ஊர்தர
 
(பொழிப்புரை) பதுமாபதி அசையாநின்ற பூங்கொம்பு போன்ற
  அழகிய மெல்லிய இடையினையும் பாடகம் அணிந்த சிறிய
  அடிகளையும் பலவாகிய வளையல்களையுமுடைய தோழிமார்
  களைத் தன் பக்கத்தினின்றும் போக்கி, நல்ல மலர்களை
  யுடைய பொய்கையின்கண் இறங்கி விளையாடுதலின்கண் தன்
  நெஞ்சம் தன்னை ஊக்குதலால்; என்க.
 
(விளக்கம்) ஆடு கொம்பு: வினைத்தொகை. அம்-அழகு,
  மருங்குல்-இடை. பாடகம் - ஒரு வகைக் காலணி. மகளிர் -
  தோழிமார், கோமாள்- கோமான் என்பதன் பெண்பால்; கோமகள்
  என்பதன் மரூஉவுமாம். உள்ளம்-நெஞ்சம். ஊர்தர - ஊக்க, `