பக்கம் எண் :

பக்கம் எண்:158

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
           கனவிற் றோன்றக் காளையும் விரும்பி
           மாசில் கற்பின் வாசவ தத்தாய்
           வன்க ணாளனேன் புன்கண் டீர
     160    வந்தனை யோவென வாய்திறந் தரற்றப
 
                 (இதுவுமது)
        157 - 160 : காளையும்............அரற்ற
 
(பொழிப்புரை) அதுகண்ட உதயண குமரனும் அக்கனவிலேயே
  அவளைப் பெரிதும் விரும்பிக் குற்றமற்ற கற்பினையுடைய
  வாசவதத்தாய்! கண்ணோட்டமற்ற என்னுடைய துன்பம் தீர்தற்
  பொருட்டு என்பால் அருள்கொண்டு நீயே வலிய வந்தனையோ?
  என்று தனது வாய் திறந்து புலம்பா நிற்ப; என்க,
 
(விளக்கம்) காளை ; உதயணன். மாசு - குற்றம். வன்கண் -
  கண்ணோட்ட மில்லாதவன். புன்கண் - துன்பம். அரற்ற - புலம்ப