பக்கம் எண் :

பக்கம் எண்:159

உரை
 
3. மகத காண்டம்
 
9. கண்ணி தடுமாறியது
 
           பைந்தளிர்க் கோதை பையென மிழற்றி
           ஏதில னன்னாட் டெற்றுறந் திறந்தனை
           காதலர் போலுங் கட்டுரை யொழிகெனக்
 
                  (இதுவுமது)
           161 - 163 ; பைந்தளிர்.........என
 
(பொழிப்புரை) அது கேட்ட வாசவதத்தை மெல்ல வாய் திறந்து
  குழறி ''ஏடா.!நீ என்னைப் பிரிந்து அயலானுடைய நல்ல நாட்டிற்குச்
  சென்றனை அல்லையோ? அங்ஙனமிருந்தும் பெருங்காதலுடையார்
  போலப் பேசும் இப்பொய்ம் மொழியை ஒழிவாயாக'' என்று கூறவென்க.
 
(விளக்கம்) கோதை : வாசவதத்தை. ஏதிலன் - அயலான்.
  இறந்தனை - சென்றனை.