உரை |
|
3. மகத காண்டம் |
|
10. புணர்வு வலித்த |
|
விடிந்திரு ணீங்கலும் வடிந்த
மான்றேர் உதயண
குமரன் புதையிருட்
கண்ட
கனவின் விழுப்ப மனமொன்
றாகிய
தோழர்க் குரைப்ப வாழ்கென வாழ்த்தி
|
|
(உதயணன்
செயல்) 1-4 ;
விடிந்து.........வாழ்த்தி
|
|
(பொழிப்புரை) இவ்வாறாக இருள்
நீங்கிப் பொழுது விடிந்த அளவிலே பயிற்றப்பட்ட குதிரைகளையுடைய தேரை
யுடைய உதயண குமரன்தான் முதல் நாள் இரவின்கண் துயிலுங்கால்
கண்ட கனவினது சிறப்பைத் தன்னோடு நெஞ்சொன்றிய உருமண்ணுவா
முதலிய தோழர்க்குக் கூறா நிற்ப, அதுகேட்ட- அத்தோழர்களும்
''எம்பெருமான் நீடூழி வாழ்க'!? என்று வாழ்த்தி என்க.
|
|
(விளக்கம்) வடிந்த மான்
-பழக்கிய குதிரை. புதை இருள்- உலகை மூடிய இருள். விழுப்பம் - சிறப்பு.
கனவு கண்டோர் அதனைக் கூறக் கேட்புழிக் கேட்டவர் அவரை
வாழ்த்துதல் மரபு,
|