பக்கம் எண் :

பக்கம் எண்:186

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
            கரந்த வுருவொடு காவல் புரிந்தவர்
            ஒடுங்குதல் வலித்துடன் போகிய பின்றை
            முனைவெந் துப்பின் மன்னனு முன்போல்
            புனைவகை மாடம் புக்குமறைந் திருத்தலிற்
 
        1 - 4: கரந்த,,,,,,,,,இருத்தலின
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயண குமரனைப் பாதுகாத்து
  வந்த உருமண்ணுவா முதலியோர் அரண்மனைக்கண் மறைந்துறைதலைத்
  துணிந்து சென்ற பின்னர்ப் போரின்கண் வெவ்விய ஆற்றலுடைய உதயண
  மன்னனும் பண்டு போல ஒப்பனை செய்யப்பட்ட மன்மதன் கோயில்
  மாடத்தின்கண் புகுந்து மறைந்திருத்தலாலே; என்க,
 
(விளக்கம்) காவல்புரிந்தவர்-உருமண்ணுவா முதலியோர்.
  முனைவெந்துப்பு - போரின்கண் வெவ்விய ஆற்றலுடைய.
  மன்னன்- உதயணன். மாடம் - மன்மதன் கோயின் மாடம்,