பக்கம் எண்:197
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 13. கோயில் ஒடுங்கியது | | தன்னகர்
குறுகித் துன்னிய மகளிரை
அகல்க யாவிரு மழலு
மெனக்கெனத்
திலக முகத்தி திருந்துபடந்
திறந்து கூன்மகள்
வீச வானா வகத்தே 85 தக்க வெல்லை
யிருத்தலின் மிக்க | |
(இதுவுமது) 81-85 :
துன்னிய,,,,,,,,.இருத்தலின | | (பொழிப்புரை) அவ்விடத்தே
தன்னைச் சூழ்ந்த தோழிமார்களை நோக்கி ''என் உடல் வெம்புகின்றது.
எல்லீரும் அகலப்போமின் என்று கூறிததிலகமிட்ட முகத்தையுடைய
அப்பதுமாபதி திரையைத் திறந்து அயிராபதி சாமரை வீசா நிற்ப அம்மகளிர்
அகலுந் துணையும் தகுந்த இடத்தே இருத்தலால்; என்க, | | (விளக்கம்) அழலும்-வெம்பும் திருந்து படம் - திருத்தமுடைய திரை திலகமுகத்தி -
பதுமாபதி. கூன்மகள்-அயிராபதி |
|
|