உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
கண்ணிற்
கண்டே னென்று கைந்நெரித் 115
தொண்ணுதன் மாத ருருகெழு
சினத்தள்
தம்மால் வந்த தாங்கரும்
வெந்நோய்
தம்மை நோவ தல்லது
பிறரை
என்னது நோவ லேத முடைத்தெனக் |
|
(இதுவுமது)
114-118 ; கை ......... உடைத்தெனக் |
|
(பொழிப்புரை) அந்நங்கை தன்
கைகளை நெரித்து அச்சமுண்டாவதற்குக் காரணமான வெகுளியை உடையளாய்த்
தனக் குள்ளே ஒருவர் தாமே தேடிக். கொண்ட ஒரு கொடுந்துன்பத்திற்குத்
தம்மையே நொந்து கொள்வதல்லது பிறரை நோதல் மேலுந் துன்பம்
தருவதொன்றாம் என்று கூறிக்கொண்டு என்க. |
|
(விளக்கம்) கைந்நெரித்தல்
- துன்பத்தின் மெய்ப்பாடு ஒண்ணுதல் மாதர் -பதுமாபதி. உரு -அச்சம்,
வெந்நோய்-வெப்பமுடைய நோய். என் நோவல் அது ஏதம் உடைத்து என்க. |