உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
கொண்டவள்
சென்று வண்டலர்
தாரோய்
வீணைக் கேற்ப விசையொடு
மற்றிவை
தானத் திரீஇத் தந்தீ கெமக்கெனக் |
|
(உதயணனும்
யாப்பியாயினியும்
உரையாடல்)
206-208:கொண்டவள்.........எமக்கென |
|
(பொழிப்புரை) அப் பணி பெற்ற
தோழி அந்த யாழினைக் கைக்கொண்டு சென்று உதயணனை அடைந்து
'வண்டு முரலும் மலர் மாலையினையுடையோய்! இந்த யாழின்கண் இசைக்கேற்ப
இந்தத் திவவினை அதற்குரிய இடத்திலே ஏற்றி இருத்தி வைத்து
எமக்குத் தந்தருள்'' என்று வேண்டா நிற்ப; என்க. |
|
(விளக்கம்) அவள்-யாப்பியாயினி. இரீஇ-இருத்தி, தந்தீக- தருக |