உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
பின்னுஞ்
சேர்ந்து பெருந்தகை யெமக்கிது
245 பண்ணுமை நிறீஇயோர் பாணிக்
கீதம்
பாடல் வேண்டுமென் றாடமைத்
தோளி
மறுத்துங் குறைகொள மறத்தகை மார்பன்
|
|
(இதுவுமது) 244 - 247;
பின்னும்............குறைகொள
|
|
(பொழிப்புரை) அங்ஙனமே
யாப்பியாயினி மீண்டும் உதயணன், பாற் சென்று ''பெருந்தகாய்!
எம்பொருட்டு இந்த யாழினைப் பண்ணுறுத்தி இதன்கண் தாளமமைந்த ஒரு
பாட்டினைப் பாடிக்காட்டியருளுதல் வேண்டும்'' என்று அசைகின்ற
மூங்கில்போன்ற தோளையுடைய அப்பார்ப்பன மகள் மீண்டும் வேண்டிக்கொள்ள
நிற்றலால்; என்க.
|
|
(விளக்கம்) பெருந்தகை-விளி. இது-இந்த யாழின்கண். பண்ணுமை நிறீஇ-பண்ணின் தன்மையை
நிறுத்தி. பாணிக் கீதம்- தாளமமைந்த இசைப் பாட்டு, ஆடு அமை
- அசைகின்ற மூங்கில்.
|