பக்கம் எண் :

பக்கம் எண்:253

உரை
 
3. மகத காண்டம்
 
16. பதுமாபதியைப் பிரிந்தது
 
           ஒழுகா நின்ற வொருமதி யெல்லையுள்
           வழிநா ணிகழ்வின் வண்ணங் கூறுவேன
 
                 (ஆசிரியர் கூற்று)
                1-2: ஒழுகா.........கூறுவேன
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணன் பதுமாபதியோடு அவளது
  கன்னி மாடத்தின்கட் களவொழுக்கம் நிகழ்த்திய ஒரு திங்கள்
  கழிந்த வழிநாளிலே நிகழ்ந்த நிகழ்ச்சியினை இனிக் கூறுவேன்
  கேண்மின், என்க.
 
(விளக்கம்) இது நூலாசிரியர் கூற்று. நுதலிப்புகுதல்
  என்னும் தந்திரவுத்தி. ஒரு திங்கள் கழிந்த வழிநாள் என்க.
  வண்ணம் - தன்மை. கேண்மின் என்பது குறிப்பெச்சம்.