பக்கம் எண் :

பக்கம் எண்:271

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           ஆண நெஞ்சத் தயிரா பதிவந்
     75    தனங்கத் தானம் புகுந்தவற் கண்டு
           கூப்பிய கையினள் கோயிலுட் பட்டதும்
           கோற்றொடி மாதர் கொள்கையுங் கூற
 
           (அயிராபதி உதயணனிடம் கூறல்)
              74 - 77 : ஆணம் ......... கூற
 
(பொழிப்புரை) அன்புமிக்க நெஞ்சத்தையுடைய அவ்வயிராபதி வந்து காமக் கோட்டத்தினுட் புகுந்து அவ்விடத்தே உதயணனைக் கண்டு கைகூப்பித் தொழுது அரண்மனையின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் கோற்றொடியணிந்த பதுமாபதியினது கொள்கையையும்  கூறா நிற்ப; என்க.
 
(விளக்கம்) ஆணம் - அன்பு. அனங்கத்தானம் - காமக்கோட்டம், அவற்கண்டு - உதயணனைக் கண்டு. மாதர் : பதுமாபதி.