(விளக்கம்) செம்மலாளர் - தலைமைத் தன்மையுடைய மறவர். கனபடை - பகைவருடைய பெரிய
படை. இரவிற் போர் செய்யக் கருதினமையின் பகைவர் காக்கைத்தொகை எனப்பட்டார்.
இதனால் இவர்கள் தம்மைக் கூகைப் படையோடு உவமித்துக்கொண்டனர். இஃது ஏகதேச உருவகம்
:
''பகல்வெல்லுங் கூகையைக் காக்கை
யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது''
என்னும் திருக்குறளையும் நினைக; (குறள்
- 481). இன்னும் களப்படை காக்கைத்தொகை என்ற இஃது, ''ஆயிரங் காக்கைக்கு ஒரு கல்''
என்னும் பழமொழி பற்றி அப் பகைப் படையின் எளிமை குறித்து நிற்றலுங் காண்க.
அத்திறத்து - அத்தகைய சூழ்ச்சியோடு. இவள் : பதுமாபதி. குருசில் : உதயணன். புலம்பு -
துன்பம். வாட்டுதல் - வாட்டுவேம். வலித்து -
துணிந்து. |